×

என் மீது நம்பிக்கை வைக்காததால் விலகினேன்...ஜிடேன் சொல்கிறார்

மாட்ரிட்: ரியல் மாட்ரிட் கால்பந்து அணி நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைக்காததாலேயே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினேன் என்று ஜினடின் ஜிடேன் கூறியுள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக 2016 ஜனவரியில் நியமிக்கப்பட்ட ஜிடேன் (பிரான்ஸ்), 2017ம் ஆண்டு அந்த அணி லா லிகா தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதுடன், சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை கோப்பையை வென்று சாதனை படைக்க வைத்தார். 2018, மே 31ல் திடீரென ராஜினாமா செய்து வெளியேறினார். அதன் பிறகு ஓராண்டுக்குள்ளாகவே 2 பயிற்சியாளர்களை பதவி நீக்கம் செய்த ரியல் மாட்ரிட் நிர்வாகம், மீண்டும் ஜிடேனை ஒப்பந்தம் செய்தது. நடப்பு லா லிகா சீசனில் 2வது இடம் பிடித்த ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் அரை இருதியிலும் செல்சீ அணியிடம் தோற்று வெளியேறியது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த கிளப் நிர்வாகத்துக்கும், ஜிடேனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.

இந்நிலையில், 2வது முறையாக ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜிடேன் அறிவித்தார். தனது இந்த முடிவுக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், ‘கிளப் நிர்வாகம் என் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. ஒரு வலுவான அணியை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில், விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. கோப்பைகளை வெல்வதற்காகத் தான் நான் இங்கே இருக்கிறேன் என்றாலும், அதையும் தாண்டி மனிதர்கள், உணர்வுகள், வாழ்க்கை என்று பல்வேறு விஷயங்களையும் கையாள வேண்டி உள்ளது. அதற்கு உரிய மதிப்போ , குறைந்த பட்சம் புரிந்துகொள்வதற்கான முயற்சியோ கூட இல்லை எனும்போது நீடிக்க முடியாது’ என்றார்.

Tags : Zidane , I quit because he didn't trust me ... Zidane says
× RELATED முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஜினெடின் ஜிடேனுக்கு கொரோனா..!